Saturday, December 22, 2007

நட்பின் புரிதலை
உணர்ந்ததால் சொல்கிறேன்..சில..

'வெளி' உலகின் கூட்டத்தில்
உன்னின் சந்திப்பு ..
குறிப்பிடும்படியில்லை..
பேசிய வார்த்தைகள் எல்லாமே..
வெகுசாதாரனம் ..
நினைவில் கூட இல்லை..!

பர்க்காத பொழுதில்கூட
உன்னை நினைத்ததாய்..
சொல்வதிற்க்கில்லை..
ஆனலும் எதன் பொருட்டாவது..
நமது சந்திப்பு நிகழ்ந்தது..!

இதுதான் என முன்மொழிந்து
பேசவில்லை இயல்பாய்
வார்த்தைகள் விழுந்து
முகவரியை தேடிக் கொண்டன..
நாட்கள், மாதங்கள் நினைவாகிப் போனலும்..
சந்திக்கும் வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை..
இதுவரை.... !

ஆனாலும்..
உனது கண்களாலும்,
வார்த்தைகளாலும் காயம்பட்டதில்லை..நான்!
இதைவிட என்ன வேண்டும்... நமது நட்பைச் சொல்ல.....!

Wednesday, December 19, 2007

கனவுகளாய்..மழை
மெளனமாய் மலர்கள்..
கூட்டுக்குள் குழந்தைகள்..
அவர்களைக் காணாமல்
சோகமாய் பள்ளிக்கூடம் ..!

தெருவெல்லாம்
கருப்புத் தொப்பிகளுடன் தலைகள்..
அங்கொன்று இங்கொன்றாய் காகஙகள்..
மரத்தடியில் ஒட்டிநின்று
காத்திருக்கும் நாய்கள்..
மின்விசிறிக்கு ஓய்வுகொடுத்த குளிர்..

விரைந்து செல்லும் வாகனத்தில்
வீசியெறியும் மழைத் தண்ணீர்..
இப்படியாக ...எனது காலை.. இன்றாய் விடிய..
எனினும் இயல்பாய் எப்பொதும்போல்
வணக்கம் ....!

- பொன்னியின் செல்வன்

Tuesday, December 18, 2007


ஆயிரமாயிரம் வார்த்தைகள் சொல்லி..
அலங்கரித்த பொழுதில்
ஒருவரை ஒருவர் கை கோர்த்தோம்..
பூக்களின் வாசனையை
நுகர்ந்த வேகத்தில்
எதிர்பார்ப்புகளின் கெள்விக்குறி..
இருவரின் இடையில்...
நீ, நான் என தினம் போட்டியிட்டு
இருளின் கொடுமையில்
உறவுகளைப் புதிப்பித்து கொள்கிறோம்...
வியப்பாகவேயுள்ளது..
விடியும் பொழுது..
எத்தனை நாட்களுக்கு என.. ?

எது இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
இருவருக்குள்ளும்.. எப்போதோ
உண்மையாய் பறிமாறிக்கொண்ட..
அன்பின் ஈரம் இன்னும் மிச்சமிருக்கோ..
இருவருக்குள்ளும்...!

Friday, December 14, 2007


நான் என்று யாரைச் சொல்ல.....!

கைபிடித்து நடைபழக்கி
நல்பண்புகளாய்...
தன்னோடு வளர்த்த
தந்தையைச் சொல்லவா...

முதலாய் தெரிந்த
உருவமாய்.. தன்னைக்
கொடுத்து ஆளாக்கிய
அன்னையை சொல்லவா...

கூடி நின்றால்...
கோடி நன்மை என
தோழோடு நிற்க்கும் நண்பர்களைச் சொல்லவா...

என்னுள் நுழைந்து..
என்னை இயக்கும் உன்னை சொல்லவா..
இங்கு நான் என்பதே தவறோ....!
எனக்கென்று பிறந்தவளோ..
என்னை ஆட்க் கொண்டவளே...
திசைகளற்று திரிந்த
கண்களை திருப்பி..
திலகமிட வைத்தாய்..
வைத்த நாள் முதல்
உன்னிடம் வைத்த கண்ணை
நீங்காமல் பார்த்து கொண்டாய்..!
உனது கோபம்
உனது சந்தோசம்
உனது அன்பு..
என்னை ஆட்சி செய்கிறதே...

ஒவ்வொரு நொடியும் உனை விட்டு விலகிடவே நினைக்கிறேன்..
நான் நானாக இருக்க...

இன்று.. இக்கணம் வரை முடியவில்லை...
இந்த போராட்டம் எதுவரை..!
கூடுகள் தேடி
அலையும் மனது...
ஒவ்வொரு உயிரிலும்
ஒவ்வொரு அடையாளம்..
தெடும் பொழுதுகள்..
நீண்ட நெடிய பயணம்..
கிடைத்தால் சந்தோஷம்..
அதுவெ நட்பாய்...
தோழமையாய்...
நீங்களாய்..
உங்களின் நட்பிற்க்கு.. என்னின் வணக்கம்..பரிணாமங்களாய்..
இரவின் தனிமை..
வெளிச்சமாய் வானம்..
சிதறிக்கிடக்கும் வார்த்தைகள்
.... அள்ளத்தெரியாத.. மனசு..
நட்சத்திரங்களை நம்பி
அலைபாயுது.. வெகுளியாய்...!
வெளிச்சப் பூக்களோடு வரும்..
விடியலின் அருமை தெரியாமல்...

நானாய் இருக்கிறேன்

வருட முழுக்க பேசினாய்...
வகிடு கூந்தலை வருடினாய்..
துக்கத்தில் சுமைதாங்கியானாய்..
இப்படி உன்னை சொல்ல என்னிடம்
எதுவுமில்லை..!
என்றாவது ஒரு நாள் நீ
வருவாயென காத்திருக்கிறேன்..
அப்பா, அம்மா, அண்ணா என
அன்பாய் உள்ள இந்த கூட்டை
கலைக்க வருவாய் நிச்சயம்..
அழுகையும் கண்ணீருமாய் வழியனுப்ப..
காத்திருக்கும் கூட்டம் ..
இவர்களின் கண்ணீர் பிரிதல். சந்தோசமாய் !
இத்தனை வருட வழ்க்கையை தொலைத்து விட்டு
உன்னொடு உறவாட
உருவாக்கப்படு காத்திருக்கிறேன்...
எந்த எதிர்பார்ப்பும் இன்றி...
எதை எதை கேட்க போகிறாயோ
இதில் நான் என்ன பொருட்டு..
இருக்கும் வரை இயல்பாய்
நானாய் இருக்கிறேன் என்னொடு.. என்றும் வாழும் கனவுகளொடு..!

Thursday, September 20, 2007

ஆயிரமாயிரம் வார்த்தைகள் கற்று.. என்ன..
தினம் தினம்.. எத்தனை மனிதர்களிடம் பேசி என்ன..
இன்னும் அடையாளம் காணப்படாமல்..
எத்தனையோ உணர்வுகள்.. மொழிகள்...
மெளனமாய்....

Friday, August 31, 2007

உனக்கென்று என்னிடம் என்ன இருகின்றது...

உனக்கென்று என்னிடம் என்ன இருகின்றது...

தேடி தேடி பார்த்த
விழிகளின் பதிவுகள்...
பார்த்து பார்த்து
பேசிய வார்த்தைகளின்
நிழல்கள்...
இன்னும் கோர்க்கப் படாமல் தொக்கி நிற்கும்
இந்த உறவின் பரிணாமங்கள்...
இவைகளையும் தவிர்த்து
உனக்கென்று என்னிடம் என்ன இருகின்றது...?
நிஜமான இன்றைய நாளினைத் தவிர....
...........

வார்த்தை பரிமாற்றங்கள்
நல் விசாரிப்புகள்
இருப்பிட விசாரணைகள்
தேங்கிய நினைவுகள்...
இவைகள் தவிர்த்து
என்னிடம் என்ன பேச
விழைகின்றாய்.....


அங்கீகாரமின்றி..
மனதிற்குள்ளே கருகி நிற்கும்
எண்ணங்களை.. உன்னிடம் பேச முடியுமா..?

யாருமற்ற வெளியில்
மொழியை மறந்து..
இயற்க்கையாய் பேச நினைப்பதை..
உன்னோடு பகிர்ந்துகொள்ள.. முடியுமா?

விருப்பமே உலகமாக
நட்பே.. கண்ணாடியாக..
கனவுகளும் கட்டியம் சொல்லுவதை..
உன்னிடம் சொல்ல முடியுமா...?

என எத்தனையோ..
கேள்விகளாய்.. நான்..
இதில் எதை உன்னுடன்
பேசப் போகிறேன்....
..
உருவமற்ற வார்த்தைகள்..
உரசிக்கொள்ளும்.. சருகுகளாக
சத்தமின்றி.....!

Sunday, August 26, 2007

வார்த்தைகளின்
வேகங்களில்
மனது.. காயம்படும்..

காயம்பட்ட மனது
மெளனமாக..
வார்த்தைகள்
தொலையும்...
உணர்வுகளின் மொழிகள்
விளக்கம் தேடும்..
விளக்கம் தேடும்
மொழிகள்.. உண்மையை
உணரும்..!

உண்மை
மனதைப் பக்குவப் படுத்தும்..
பக்குவப் படும் மனது..
வார்த்தைகளை பலப்படுத்தும்..
நட்பும் வளரும்..
நல்லவைகளும்.. நடக்கும்..!
நீ என்பதன்
மொழி... கனாக்காணும் வரை..
நான் என்னும் பலம்
உன்னைக் காணும் வரை..!

Monday, August 13, 2007

காலை...

காலை விழிகள் திறக்க
பதியும் உருவம்...
விழிகள் பாராமல்
பழகும் உருவம்...

விழிகள் பார்த்தவை
கலைந்து விடும்.. இரவுக்குள்
விழிகள் பாரா உருவம்...
மனம் பதிய
உனர்வாய் உருகும்..
உண்மையாய்..!

Friday, March 16, 2007

எனக்கானவள்.....

வாழ்க்கை என்பதன் அடையாளம்..
சந்தோசத்தின் பரிமாணங்கள்
சக துக்கங்களின் அனுபவங்கள்..

மூங்கில் இசையாய்..
கட்டுக்குள் வெளிப்படும்
கவிதை மொழிகள்...

முடிவறியா பயணமிது...
துணை வருவோர் எத்தனை பேர்..
தோள்கொடுப்போர் எத்தனை பேர்..

பருவம் தந்ததில்
என்னின் பாதியானாய்..
உடம்பில் பாதியானதால்..
உயிரில் கலந்தாய்...
எனக்கோர்.. உயிரையும் தந்தாய்....!

வாழ்வோடு வந்ததால்..
என் வாழ்வின் அர்த்தம் சொன்னாய்..
விதியின் வழியே சிறைபட்ட போதெல்லாம்..
என்னை மீட்டுக் கொடுத்தாய்...

மேகமாய் நான் நிற்க..
தென்றலாய், புயலாய்..விளையாடினாய்.......

அணைப்பில் ஆயிரம் வார்த்தைகள்
சொன்ன போது..
மெளனமாய் இருந்தாய்..
நான் உன்னை மறந்த வேளையில்..
மெளனமாய் ஆயிரம் வார்த்தைகள் சொன்னாய்..

நட்பு...

கனவு காண வேண்டும்.......
கண்கள் மூடி.. கனவு காண வேண்டும்..
வியர்வை நாற்றம் மறந்து..
இன்றைய தோல்விகளின்
தழும்புகளை மறக்க
.....கனவு காண வேண்டும்..
நாளைய பொழுதின்
நம்பிக்கைகளில் பூத்தது இந்த நட்பு...
கவிதையாய் பிறந்து..
தோழமையாய் பரிமாறுகிறது...

நல்லவைகள் நடப்பதில்லை..
உணரப் படுகின்றன...இந்த நட்பைப் போல.......

தோழி...

தென்றல் சுமந்துவரும் இனிமை..
சிதறும் வார்த்தை எங்கும் பூமணம்..
அன்புடன் அழைப்பதில்.. தோழமை..
எனை இங்கு தூண்டும் கவிதை..

நினது மொழிக்கு சரணம் கட்டும்....
சுரம் சேர்த்து..
இனிமை சொல்லி
இனிதே மகிழ்விக்கும்..
கவிதை கேட்கும் பெண்ணே...
கவிதைக்கு கவிதை அழகு சேர்க்குமா....

கதையாய்..

நிஜம் என்கிற வேள்வியில்
தினம் நெய் ஊற்றி
என்னை உயிர்பிக்கும் நண்பர்கள்....
நேற்றாகி விடுகிறார்கள்...

மொழிகள் மறந்து
முகம் தொலைத்து...நினைவிலேயே...
கதைகளாகி விடுகிறர்கள்...!!!!!!

கண்கள் பார்க்காத உருவம்.....
ஆனாலும்.. தினம் தினம் சுகம் காண்கிறது...


விடியலில் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அர்த்தத்துடன் தோன்ற..
மனிதர்கள் என்னவோ மாறத வார்த்தைகளுடன்..
நான் என்று இல்லாமல் நாம் என்று மாறும்
நல்லுலகம் படைத்திட
மானுடம் பேசுவோம்... வாரீர்.

ஆசையாகத்தானிருக்கிறது...

ஆசையாகத்தானிருக்கிறது...

விடியல் என்னை வியர்க்க வைக்கும் வரை..

விதவிதமாய்

உன்னை எண்ணிப் பார்க்க

ஆசையாகத்தானிருக்கிறது...


இருளும் தனிமையும்

என்னை உன்னோடு உற்சாகப்படுத்த...

உதவிடும்உணர்வுகளோடு கழியும்பொழுதுகளை யெண்ண... ஆசையாகத்தானிருக்கிறது...


உன்னோடு நான்

உன் நினைவுகளோடு..

நான் என தங்கிவிட்ட வாழ்க்கை....ஆசையாகத்தானிருக்கிறது...!!!!

Thursday, March 15, 2007

ஊடல்.....

வார்த்தை வேள்விதனில்சுட்ட மனது...
உனது முகம் சுமக்கும் ...
மெளனம்என்னை இன்னும் காயப்படுத்துதே.....

நிஜமறந்தவேளை....
உன் நினைவு தூங்கிய பொழுது...
வார்த்தைகள் சண்டையிட்டு கொண்டன..
ஆனாலும்..
சொன்ன வார்த்தைகள் தவிர்த்து
சொல்லும் வார்த்தை கேள் .. பெண்ணே....

உறைந்து நிற்க்கும் என்னை...
உன் மெளனம் கலைத்து... உயிர்ப்பிப்பாய்..
பொழுதுகள் கரைய...
பொய்மைகள் உறைக்க
நிஜங்களை.. நிழலுக்குள்...ஏன் மறைக்கிறோம்....

வெளியில் வருவாய்..
வெளிச்சம் பெறுவாய்......

உணர்வுகளொடு.. ஊமையாக தவிக்கிறேன்.. நான்...!!

நீ....

உன் வார்த்தைகளில்..
என் சுவாசம் ...
உன் மெளனத்தில்என் கனவுகள்...
உன் பதிலில்என் வெளிச்சம்.....
இவை.. எல்லாமெ..
உன்னைக் காணும் வரை...
பின்.. நானக நீயானய்... !

இன்றும்...

விடியாத இரவு...
வெளிச்சம் நோக்கி கத்தும் சேவல்...
பால் காரனின் மணியோசை...
பக்கத்து வீட்டு பெண்ணின்..
வாசல் தண்ணீர் தெளிக்கும் சத்தம்...
பலபலவென..
கண்கள் திறக்க....
இன்றின் சுமை..நரம்பு முறுக்கேற...
புத்தி சுழலுகிறது
எத்தனையோ மனிதர்கள்...
ஆனாலும்.. நண்பர்களாய்... சிலர்..
இன்றைய பொழுதை... நினைவுகளில் எழுத.... !

Natbu

கனவுகள் என்னை கலைக்கும் வரை..
விடியல் என் உலகிற்க்கு வர்ணம் பூசும் வரை...
தென்றல் என் மேனி தொட்டு.. சிலிர்க்க வைக்கும் வரை..

பனித் துளி என்னைப் பார்த்து.. பல வண்ணமாய் சிரிக்கும் வரை..
....
இரவின் தனிமையில்.. நான் சுவாசிக்க..
நினைவுகளாய்... நண்பர்கள்.....