ஆசையாகத்தானிருக்கிறது...
விடியல் என்னை வியர்க்க வைக்கும் வரை..
விதவிதமாய்
உன்னை எண்ணிப் பார்க்க
ஆசையாகத்தானிருக்கிறது...
இருளும் தனிமையும்
என்னை உன்னோடு உற்சாகப்படுத்த...
உதவிடும்உணர்வுகளோடு கழியும்பொழுதுகளை யெண்ண... ஆசையாகத்தானிருக்கிறது...
உன்னோடு நான்
உன் நினைவுகளோடு..
நான் என தங்கிவிட்ட வாழ்க்கை....ஆசையாகத்தானிருக்கிறது...!!!!
No comments:
Post a Comment