Thursday, March 15, 2007

ஊடல்.....

வார்த்தை வேள்விதனில்சுட்ட மனது...
உனது முகம் சுமக்கும் ...
மெளனம்என்னை இன்னும் காயப்படுத்துதே.....

நிஜமறந்தவேளை....
உன் நினைவு தூங்கிய பொழுது...
வார்த்தைகள் சண்டையிட்டு கொண்டன..
ஆனாலும்..
சொன்ன வார்த்தைகள் தவிர்த்து
சொல்லும் வார்த்தை கேள் .. பெண்ணே....

உறைந்து நிற்க்கும் என்னை...
உன் மெளனம் கலைத்து... உயிர்ப்பிப்பாய்..
பொழுதுகள் கரைய...
பொய்மைகள் உறைக்க
நிஜங்களை.. நிழலுக்குள்...ஏன் மறைக்கிறோம்....

வெளியில் வருவாய்..
வெளிச்சம் பெறுவாய்......

உணர்வுகளொடு.. ஊமையாக தவிக்கிறேன்.. நான்...!!

No comments: