நீ..
என்னுள் எப்போதும்
நினைவுகளாய்
இயங்கி கொண்டிருப்பது...!
நான்...
உன்னின் நினைவுகளை
ஓயாமல் சுமந்து
நீருற்றி..
விருட்சமாய்..
விரியவைத்திருப்பது...!
நம் நட்பு ....
புத்திகள் மறந்து..
தூங்கும் வேளையிலும்..
கனவுகளாய் ..
கலையாதிருப்பது .....
இதில் இந்த காலை வணக்கம்
என்ன சொல்லும்...
ஆனாலும் ,
உன்னின்
பரிச்சயம்..
ஒவ்வொரு நாளும்
இந்த காலை வணக்கத்தில் தானே..
புதிப்பிக்கப் படுகிறது..
ஆயின்,
இனிய காலை வணக்கம்
என்றும் போல் இன்றும்.. இனிதாய்..!
Tuesday, January 29, 2008
Subscribe to:
Comments (Atom)