Sunday, August 26, 2007

வார்த்தைகளின்
வேகங்களில்
மனது.. காயம்படும்..

காயம்பட்ட மனது
மெளனமாக..
வார்த்தைகள்
தொலையும்...
உணர்வுகளின் மொழிகள்
விளக்கம் தேடும்..
விளக்கம் தேடும்
மொழிகள்.. உண்மையை
உணரும்..!

உண்மை
மனதைப் பக்குவப் படுத்தும்..
பக்குவப் படும் மனது..
வார்த்தைகளை பலப்படுத்தும்..
நட்பும் வளரும்..
நல்லவைகளும்.. நடக்கும்..!
நீ என்பதன்
மொழி... கனாக்காணும் வரை..
நான் என்னும் பலம்
உன்னைக் காணும் வரை..!