
நான் என்று யாரைச் சொல்ல.....!
கைபிடித்து நடைபழக்கி
நல்பண்புகளாய்...
தன்னோடு வளர்த்த
தந்தையைச் சொல்லவா...
முதலாய் தெரிந்த
உருவமாய்.. தன்னைக்
கொடுத்து ஆளாக்கிய
அன்னையை சொல்லவா...
கூடி நின்றால்...
கோடி நன்மை என
தோழோடு நிற்க்கும் நண்பர்களைச் சொல்லவா...
என்னுள் நுழைந்து..
என்னை இயக்கும் உன்னை சொல்லவா..
இங்கு நான் என்பதே தவறோ....!
2 comments:
நான் என்று யாரைச் சொல்ல.....!
தலைப்பே அருமையான சிந்தனை.
http://jeyan-kavithai.blogspot.com/
Post a Comment